×

முசிறி அண்ணா அரசு கல்லூரியில் ஆசிரியர் கழகத்தினர் வாயில்முழக்க போராட்டம்

தா.பேட்டை, அக்.10:  முசிறி அண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் வாயில் முழக்க போராட்டம் நடைபெற்றது. மாநில நிர்வாகி சார்லஸ் செல்வராஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் செந்தில்குமரன், மருதைவீரன், மஞ்சுளாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் வெற்றிசெல்வி, சிவகாமி, அஞ்சலம், பாலசந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கிராமப்புற கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை களையும் வகையில் ஆசிரியர்களை நியமனம் செய்யவேண்டும். தர ஊதியம் அரசாணை 102ல் திருத்தம் வேண்டும். பி.ஹெச்.டி முடித்தவர்களுக்கு நெறிமுறைகளை பின்பற்றி ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

அரசு கல்லூரிகளுக்கு சுற்றுச்சுவர் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் பேராசிரியர்கள் திரளாக கலந்துகொண்டனர். இதேபோல் துவாக்குடியில் உள்ள திருச்சி அரசு  கல்லூரி் நுழைவாயில் முன்பு நடந்த வாயிற்முழக்க ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மண்டல செயலாளர் டேவிட் லிவிங்ஸ்டன் தலைமை வகித்தார். கல்லூரி கிளை செயலாளர் செல்வராணி, தலைவர் மோகன்குமார், கலந்துகொண்டனர்.

Tags : Musiri Anna ,
× RELATED முசிறி அண்ணா அரசு கல்லூரி வளாகத்தில்...