×

வில்லியனூர் பத்துக்கண்ணு சாலையில் டீசல் இல்லாததால் ரயில்வே கேட்டில் நின்ற லாரி: போக்குவரத்து பாதிப்பு

வில்லியனூர், அக். 10:    வடமங்கலம பகுதியில் சிமெண்ட் இறக்கிவிட்டு சென்னை சென்ற அரியனா மாநிலத்தை சேர்ந்த லாரி நேற்று மாலை 5 மணியளவில் வில்லியனூர்- பத்துக்கண்ணு ரயில்வே கேட் பகுதியில் டீசல் இல்லாமல் திடீரென பழுதடைந்து நின்றுவிட்டது. இதனால் ரயில்வே கேட் போடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் அதிகளவில் செல்லும் நேரம் என்பதால் வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதுசம்பந்தமாக வில்லியனூர் போக்குவரத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததின்பேரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை
மாற்றிவிட்ட. பிறகு டீசல் ஊற்றி லாரியை பழுது நீக்கி
அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனஓட்டிகள் கடும்
சிரமத்துக்குள்ளாகினர். 

Tags : Larry ,railway cancellation ,road ,Villianur Pathakannu ,
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி