×

தொழிலக பாதுகாப்பு இயக்குநர் அறிவிப்பு வத்திராயிருப்பு அருகே மழையால் சாய்ந்த மின்கம்பங்கள்

வத்திராயிருப்பு, அக். 10: வத்திராயிருப்பு அருகே, மழையால் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பு அருகே, ரெங்கபாளையத்தில் இருந்து சுந்தரபாண்டியம் கிராமத்துக்கு சாலை செல்கிறது. இப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளுக்கு மின்இணைப்பு கொடுப்பதற்காக, சாலையோரம் புதிய மின்கம்பங்கள் ஊன்றப்பட்டன. சிமெண்டால் ஆன
இந்த மின்கம்பங்களில் மின்வயர்களும் பொருத்தப்பட்டு, மின்விநியோகமும் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையால் 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் விவசாய நிலங்களில் சாய்ந்துள்ளன. இதனால், மின்வயர்கள், மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளன. சாலையோரம் சிமெண்ட் கம்பங்களை பதிக்கும்போது, அவற்றைச் சுற்றி காங்கிரீட் போடாமல், மண்ணைப் போட்டு மூடியுள்ளனர். இதனால், மின்கம்பங
க்ள் சாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால்,
அரசுப் பணம் வீணாகியுள்ளது. எனவே, சிமெண்ட் கம்பங்களைச் சுற்றி, காங்கிரீட் போட்டு ஊன்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Occupational Safety Director ,householder ,
× RELATED முன்விரோத தகராறில் எதிர்...