×

குத்துச்சண்டை போட்டி மன்னர் கல்லூரி மாணவிகள் சாதனை

புதுக்கோட்டை, அக்.10:  மாநில அளவிலான பெண்களுக்கான சீனியர் குத்துச்சண்டை போட்டி செங்கல்பட்டில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவிகள் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில் கலந்துகொண்டனர். இதில் உடற்கல்வித்துறை 2ம் ஆண்டு மாணவி சாவித்திரி 51 கிலோ எடைப்பிரிவில் முதலிடமும், உடற்கல்வித்துறை 2ம் ஆண்டு மாணவி சங்கீதா 54 கிலோ எடைப்பிரிவில் முதலிடமும் பெற்று இன்று (10ம் தேதி) முதல் 14ம் தேதி வரை உத்தர்காண்ட் மாநிலம் ரூக்கியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான பெண்களுக்கான சீனியர் குத்துச்சண்டை போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். தேசிய போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிகளை கல்லூரி முதல்வர் சுகந்தி, உடற்கல்வி இயக்குனர் ஜான் பார்த்திபன், உடற்பயிற்சி பயிற்றுனர் ராம்குமார் பாராட்டினர்.

Tags :
× RELATED பொன்னமராவதி அருகே செம்பூதியில் கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்