×

பொன்னமராவதியில் புதிதாக கட்டப்பட்ட வடிகால் ஒரு மாதத்திலேயே இடிந்தது

பொன்னமராவதி, அக்.10:    பொன்னமராவதியில் ஒரு மாதத்திலேயே புதிதாக கட்டப்பட்ட வடிகால் இடிந்து விழுந்துள்ளது. பொன்னமராவதி பேரூராட்சியில் காந்தி சிலையில் இருந்து பொன்.புதுப்பட் வழியாக வேகுப்பட்டி செல்லும் சாலை புதிதாக போடப்பட்டது. பொன்.புதுப்பட்டி கடைவீதி வழியாக செல்லும் இந்த சாலைஓரம் பெவர்பிளாக்குகள் பதித்து வடிகால் கட்டப்பட்டது. இவை கட்டி ஒரு மாதம் கூட ஆகவில்லை. கடந்த 2  நாட்களுக்கு முன் சிறிய மழைக்கு வடிகால் உடைந்து விழுந்துள்ளது. பெவர்பிளாக் கல் உடைந்துள்ளது. காந்தி சிலை எதிரிரே ஒரு சிறிய பகுதி வடிகால் உடைந்து விழுந்துள்ளது. பெரிய மழை பெய்தால் அனைத்தும் உடைந்து விழுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

நல்ல சாலை அமைத்து இரு புறமும் கல் அமைத்து வடிகால் கட்டப்பட்டதால் வியாபாரிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் இப்போது திடீர் என வடிகால் உடைந்து விழுந்துள்ளதால் அனைத்தும் இப்படி உடைந்து விழுமோ என்ற நிலையுள்ளது. வடிகால் அமைக்கும்போது அதிகாரிகள் பார்த்தார்களா, முறையாக சரியான முறையில் கட்டப்பட்டதா என்பதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு இடிந்து விழுந்த காந்தி சிலை எதிரே செல்லும் சாலையின் வடிகால் பகுதிகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ponnaravarai ,
× RELATED உற்பத்தி, ஏற்றுமதிக்கு அரசு நிதியுதவி...