×

புதர்மண்டிக் கிடக்கும் வாறுகாலால் சாலையில் தேங்கும் கழிவுநீர்

விருதுநகர், அக். 10: விருதுநகர் புல்லாலக்கோட்டை சாலையில், வாறுகால் புதர்மண்டிக் கிடப்பதால், சாலையில் கழிவுநீர் தேங்கி, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். விருதுநகரில் பழைய பஸ்நிலையத்தை அடுத்து, மீனாம்பிகை பங்களா பஸ்நிறுத்தம் உள்ளது. இதன் எதிரே உள்ள புல்லாலக்கோட்டை சாலையின் இருபுறமும் கழிவுநீர் வாறுகால் உள்ளது.
இந்த சாலையில் உள்ள பாதாளச்சாக்கடையில், அப்பகுதி குடியிருப்புகளின் கழிவுநீர் செல்கிறது. நகரில் பழைய பஸ்நிலையம், சின்னப்பள்ளி வாசல் பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட தெருக்களில் உள்ள குடியிருப்புகளின் கழிவுநீர் வாறுகால் வழியாக சென்று மணிக்கூண்டு, பழைய பஸ்நிலையம், புல்லாலக்கோட்டை சாலையோரம் உள்ள வாறுகால் வழியாக கௌசிகா ஆற்றில் கலக்கிறது. இந்நிலையில், புல்லாலக்கோட்டை சாலையின் இருபுறமும் உள்ள வாறுகால் புதர்மண்டிக் கிடக்கிறது. இதனால், கடந்த இரு தினங்களாக சாலையில் கழிவுநீர் ஓடிவருகிறது. இதனால், தூர்நாற்றம் வீசி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் புல்லாலக்கோட்டை சாலையில், வாறுகால் அடைப்பை அகற்றி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

Tags : road ,wanderer ,
× RELATED சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில்...