விருதுநகர், அக். 10: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கழிப்பறைகளை பராமரிக்காததால், துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. விருதுநகர் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில், பயோமெட்ரிக் கதவுகளை பொருத்தி, கைரேகை வைத்தால்தான் உள்ளே செல்லமுடியும் என்ற அளவிற்கு ஹைடெக்காக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பறைகளை பராமரிக்காமல் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அலுவலர்களும், பொதுமக்களும் முகஞ்சுளிக்கின்றனர்.
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மெயின் பில்டிங் வளாகம், கருவூலத்துறை வளாகம் பொது சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை வளாகம் என மூன்று வளாகங்கள் உள்ளன. இந்த மூன்று வளாகங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் பணிபுரிகின்றனர். தினசரி அலுவல் காரணமாக, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஆசிரியர்கள் வந்து செல்கின்றனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளுக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தை பொறுத்தவரை,
இது குறித்து அரசு அலுவலர்கள் கூறுகையில், ‘கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பயோமெட்ரிக் கதவுகள் பொருத்தி ஹைடெக்காக வைத்துள்ளனர். ஆனால், அலுவலக வளாகத்தில் சிதிலமடைந்து கிடக்கும் கழிப்பறைகளை கவனிப்பதில்லை. தற்போது கழிப்பறைகளில் கதவுகள், தண்ணீர், வாளிகள், குவளைகள் இல்லை. கழிப்பறைகள் துர்நாற்றம் வீசுவதால், சிறுநீர் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது’
என்றனர்.