×

ரோட்டை கண்டுபிடித்து தாங்க ஆபீசர்... காளையார்கோவில் மக்கள் வேண்டுகோள்

காளையார்கோவில், அக். 10: காரையார்கோயில் அருகே மூர்த்திநகர், சோமசுந்தரநகரில் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து காளையார்கோவில்- காரைக்குடி மெயின்ரோட்டை இணைக்கும் தார்ச்சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அதன்பின் எந்த பராமரிப்பு பணியும் பார்க்கவில்லை. இதனால் சாலை சேதமடைந்து தார் இருந்த இடமே தெரியாமல் ஜல்லிக்கற்களே தெரிகின்றன. மேலும் சாலையில் 10 மீட்டருக்கு ஒரு மெகாசைஸ் பள்ளம் ஏற்பட்டு வாகனஓட்டிகளை தள்ளாட வைத்து வருகிறது. தற்போது பெய்து வரும் மழையால் இந்த பள்ளங்களும் தெரியாமல் தண்ணீர் நிரம்பி கிடக்கின்றன. இதனால் வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமுற்று வருகின்றனர்.
நேற்று கூட பள்ளி மாணவி ஒருவர் பள்ளம் தெரியாமல் தவறி விழுந்து விட்டார். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தார்ச்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி