×

கரூர் வந்த தாமிரபரணி புஷ்கர விழிப்புணர்வு ரத யாத்திரை பக்தர்கள் தரிசனம்

கரூர், அக். 10: கரூர் வந்த தாமிரபரணி மகா புஷ்கர விழிப்புணர்வு ரத யாத்திரையை நூற்றுக்கணக்கான பக்தர்கள் பார்வையிட்டு தரிசனம் செய்தனர். தமிழ்நாடு முழுவதும் இந்த விழிப்புணர்வு ரத யாத்திரை பயணித்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் இந்த தாமிரபரணி மகா புஷ்கர விழிப்புணர்வு ரத யாத்திரை நேற்று காலை அரவக்குறிச்சியில் இருந்து புறப்பட்டு காலை 11 மணியளவில் கரூர் பஸ்ஸ்டாண்ட் பகுதிக்கு வந்தது.

விஎச்பி பாலு தலைமையில் ரத யாத்திரையை வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் நகராட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, பசுபதிபாளையம், மாயனூர், குளித்தலை, தோகைமலை ஆகிய கரூர் மாவட்ட பகுதிகளுக்கும் இந்த ரத யாத்திரை சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : Karur ,pilgrims ,Thamirabarani Pushkara ,Rath yatra ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...