×

மூதாட்டியிடம் 5 சவரன் பறிப்பு

திருத்தணி:  திருத்தணி அடுத்த என்.என்.கண்டிகை, வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் துளசியம்மாள் (75). இவர், நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டிவிட்டு அடுத்த தெருவில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது, பின்தொடர்ந்து  பைக்கில் ஹெல்ெமட் அணிந்து வந்த 2 மர்ம ஆசாமிகள், துளசியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED சென்னையில் அனைத்து பேருந்து...