×

உடன்குடி அருகே சாலையோரம் மயங்கி கிடந்த மூதாட்டியை காப்பாற்றிய மருத்துவக்குழு

உடன்குடி,அக்.10: உடன்குடி அருகே சாலையோரம் மயங்கி கிடந்த மூதாட்டியை அந்த வழியாக சென்ற அரசு மருத்துவமனை மருத்துவக்குழுவினர் காப்பாற்றி சிகிச்சையளித்தனர்.மெஞ்ஞானபுரம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடமாடும் மருத்துவ குழு, பள்ளிக்குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவக்குழு என பல குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இதில் ஆர்பிஎஸ்கே குழுவினர் நேற்று காலை வழக்கம் போல் மெஞ்ஞானபுரம் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் இருந்து உடன்குடி பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு வழக்கமான ஆய்வுக்காக சென்றனர். அப்போது உடன்குடி-செட்டியாபத்து சாலையின் ஓரம் மயங்கிய நிலையில் மூதாட்டி ஒருவர் கிடந்துள்ளார். அந்த வழியே காரில் சென்று கொண்டிருந்த மருத்துவர் ஸ்டாலின், பகுதி சுகாதார செவிலியர்கள் கலையரசி, வசந்தா ஆகியோர் உடனடியாக அந்த மூதாட்டியை மீட்டு முதலுதவி சிகிச்சை மற்றும் உரிய சிகிச்சைகள் அளித்து அவரை அனுப்பி வைத்தனர். மருத்துவக்குழுவினரின் இந்த செயலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின், மருத்துவமனை ஊழியர்கள் பாராட்டினர்.

Tags : team ,road ,Udangudi ,
× RELATED இன்சுலின் வழங்க கோரிய மனு தள்ளுபடி...