×

சீர்காழி நகர் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றும் பணி

சீர்காழி,அக்.10: சீர்காழி நகராட்சி ஆணையர் அஜிதாபர்வீன் உத்தரவின்பேரில் நகராட்சி ஓவர்சீயர் பாலசுப்பிரமணியன் துப்புரவு ஆய்வாளர் மோகன், துப்புரவு மேற்பார்வையாளர் கலியபெருமாள், துப்புரவு ஒப்பந்தகாரர் ஞானவேல் ஆகியோர் வடக்கு கோபுர வாசல், தேர் வடக்கு வீதி ஆகிய பகுதிகளில் மழைநீருடன் தேங்கி கிடந்த கழிவுநீரை பொக்லைன் இயந்திரம் உதவியுடன் துப்புரவு பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி கொசுமருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : removal ,town area ,Sirkali ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...