×

மழை பாதிப்பு பகுதிகளை பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு

சோழவந்தான். அக். 9: சோழவந்தானில் மழை பாதித்த பகுதிகளை மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் விஜயலெட்சுமி ஆய்வு செய்தார். மழை காலம் துவங்கி விட்டதால் பேரூராட்சியின் 18 வார்டு பகுதிகளிலும் மழைநீர் தேங்காமலும், டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்பும் கொசுக்கள் பெருகுவதை தடுக்கும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பேரூராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் மழைநீர் வடிகால் பகுதிகளில் தூர்வாறும் பணிகளையும், பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள மழை வெள்ள தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களையும் பார்வையிட்டார். பேரூராட்சி சார்பில் செய்ய வேண்டிய பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் குறித்து பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். ஆய்வின் போது துப்புறவு ஆய்வாளர் கணேசன், இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார், சிவக்குமார், பணியாளர்கள் கனகராஜ், வாசிமலை, சதீஸ்குமார், பூவலிங்கம், சோணை, பாலமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : areas ,Panorama Assistant Director ,
× RELATED சென்னையிலும் வருகிறது பசுமை பந்தல்!