நெல்லை, அக்.9:புளியங்குடி எஸ்.வீராசாமி செட்டியார் கல்வியியல் கல்லூரியில் குடிமைப்பயிற்சி முகாம் துவக்கவிழா நடந்தது. வீராசாமி செட்டியார் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் தாளாளர் முருகையா தலைமை வகித்தார். தலைமைச் செயல் இயக்குநர் சீனிவாச ராகவன், இயக்குநர் பார்வதி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தென்காசி அரசு மருத்துவமனை இணை இயக்குநர் அருண்மொழி துரையப்பா பங்கேற்றார். கல்லூரி முதல்வர் சுப்பிர
மணியன் வரவேற்றார். முகாமில் கல்வியியல் கல்லூரி ஆலோசகர் சாது சுந்தர சிங் வாழ்த்திப் பேசினார். விழாவில் கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். மூத்த பேராசிரியர்