×

ஆள்மாறாட்டத்தில் திமுக பிரமுகர், டிரைவருக்கு அரிவாள் வெட்டு கூலிப்படையினருக்கு வலை

நீடாமங்கலம்,அக்.9: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா மன்னார்குடி திமுக கிழக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி செல்வம் (56). இவருக்கு அரசியல் தொடர்பாக பல்வேறு கொலை மிரட்டல்கள் அடிக்கடி வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று மாலை 7.45 மணியளவில் இவரது டிரைவர் வடவேர்குடியை சேர்ந்த லோகேஷ்(32),மற்றும் மன்னார்குடி கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வடபாதிமங்கலம் பாஸ்கர்(34)  ஆகிய இருவரும் காரில் வடபாதிமங்கலத்திலிருந்து மன்னார்குடி நோக்கி செல்வம் காரில் நேற்று மாலை வந்துள்ளனர்.அப்போது செல்வம் காரில் வருவதாக நினைத்த கூலிப்படையை சேர்ந்த 10 பேர் நாகங்குடி காடுவெட்டி தெரு இடையே கார் வரும் போது புதிய டிராக்டரில்  வந்து  காரில் மோதியுள்ளனர்.
அப்போது கார் டிரைவர் லோகேஷ் காரை நிறுத்திய உடன் கூலிப்படையை சேர்ந்த மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் டிரைவரை சரமாரியாக தலை, கைகளில் வெட்டியுள்ளனர்.அவருடன் இருந்த பாஸ்கரையும் வெட்டியதால் பாஸ்கர் காயங்களுடன் ஓடி  ஒளிந்து விட்டார். வெட்டு காயத்துடன் லோகேஷை ஆம்புலன்சில் ஏற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.பாஸ்கரை அக்கம் பக்கத்தில் உள்ள திமுகவினர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது தொடர்பாக கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10பேர் கொண்ட கூலி படையினரை தேடி வருகின்றனர்.கடந்த ஆண்டு கூத்தாநல்லூர் அருகில் உள்ள குடிதாங்கிச்சேரி என்ற இடத்தில் செல்வத்தை கூலிப்படையினர் தாக்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது காரில்  செல்வம் வராததால் கூலிப்படையினரின்  தாக்குதலிருந்து  தப்பினார்.

Tags : DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி