×

அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

வலங்கைமான், அக்.9: வலங்கைமான் அடுத்த சந்திரசேகரபுரத்தில் அரசு அனுமதியின்றி மலைபோல் மணல் குமித்து கொண்டிருந்த கிட்டாட்சியை வலங்கைமான் வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா சந்திரசேகரபுரம் ஆதிதிராவிடர் தெரு அருகே கிட்டாட்சி மற்றும் டிராக்டர் உதவியுடன் மணல் விற்பணை செய்யும் நோக்கில் மலைபோல் மணல் குவிக்கபட்டு கொண்டிருப்பதாக திருவாரூர் கலெக்டருக்கு தகவல் கிடைக்கபெற்றதாக கூறப்படுகிறது. அதனையடுத்து வலங்கைமான் தாசில்தார் சந்தான கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அனுமதியின்றி மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த கிட்டாட்சி மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Sandy ,
× RELATED உம்மன் சாண்டிக்கு எதிரான சரிதா...