×

மகாளய அமாவாசை திருவாரூர் கமலாலய குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்திரளானோர் வழிபாடு

திருவாரூர், அக்.9: மகாளய அமாவாசையையொட்டி திருவாரூர் கமலாலய குளத்தில் நேற்று நூற்றுக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பனம் வழங்கினர்.பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு ஆண்டுதோறும் அவர்களது நினைவு நாளுக்காக தர்ப்பனம் கொடுப்பது வழக்கம். அதுமட்டுமன்றி அமாவாசை தினங்களிலும் மாதந்தோறும் கொடுப்பது வழக்கம். இந்நிலையில் ஆண்டுக்கொரு முறை வரும் நினைவு நாளில் தர்ப்பணம் கொடுக்காதவர்கள் மகாளய அமாவாசை தினத்தில் அதுவும் புரட்டாசி மாதத்தில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி நேற்று மகாளய அமாவாசையையொட்டி திருவாரூர் கமலாலய குளத்தில் ஏராளமானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு வேத விற்பன்னர்களைக் கொண்டு தர்ப்பனம் வழங்கினர்.

Tags : elders ,devotees ,pond ,Thiruvarur ,Kamalalaya ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்