×

கீரனூர் கொங்கந்திரையன்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை திறக்க கோரிக்கை

புதுக்கோட்டை, அக். 9: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள கொங்கந்திரையன்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வாலியம்பட்டி பஞ்சாயத்தில் கொங்கந்திரையன்பட்டி கிராமம் உள்ளது. இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய ரேஷன் கடை கட்ட அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து கட்டிடம் கட்டப்பட்டு. தற்போது பணிகள் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அதனை திறந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர்.
இதனால் பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு மிகவும் சிரமப்பட்–்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து ரேஷன் கடையை திறக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Keeranur ,ration shop ,Kondandiranpatti ,
× RELATED குத்துக்கல்வலசை வேதபுதூரில் புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா