×

மகாளய அமாவாசை பல்லவன் குளக்கரையில் திதி கொடுத்து தர்ப்பணம்

புதுக்கோட்டை, அக். 9: மகாளய அமாவாசையை முன்னிட்டு புதுக்கோட்டை கீழராஜவீதியில் உள்ள சாந்தநாதசுவாமி கோவில் அருகே உள்ள பல்லவன் குளக்கரையில் அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் குளத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து, தர்ப்பணம் செய்தனர். அப்போது எள், தர்ப்பணை நீர், பிண்டம், அரிசி, வாழைப்பழம் ஆகியவற்றை வைத்து முன்னோர்களை வழிப்பட்டனர். இதையொட்டி அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளிலும் பொதுமக்கள் மகாளய அமாவாசையை முன்னிட்டு புனிதநீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

Tags : Mahalaya Amavasai ,Pallava ,
× RELATED கஷ்டங்களைப் போக்கும் காஞ்சி கைலாசநாதர்