×

பொன்னமராவதி அருகே அனுமதியின்றி குவித்திருந்த 3 யூனிட் மணல் பறிமுதல்

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள கார்னாபட்டி ஆற்றுப் பகுதியில் அனுமதியின்றி மணல் குவிக்கப்பட்டு இருப்பதாக வருவாய்த் துறைக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கார்னாபட்டி ஆற்றுப்பகுதியில் பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சுமார் 3 யூனிட் மணலை பறிமுதல் செய்தார்.  இந்த மணலை பொன்னமராவதி தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆய்வின்போது காரையூர் வருவாய் ஆய்வாளர் பாண்டி, கீழத்தானியம் கிராம நிர்வாக அலுவலர் முருகராஜ், கிராம உதவியாளர்கள் சுரேஸ், விஜயா உடனிருந்தனர்….

The post பொன்னமராவதி அருகே அனுமதியின்றி குவித்திருந்த 3 யூனிட் மணல் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ponnamaravati ,Karnapatti ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதியில் இருந்து...