×

ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் பதவிக்காலம் நீட்டிப்பு

புதுடெல்லி: ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த முகுல் ரோத்தகி  ராஜினா மா செய் ததைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் கே.கே வேணுகோபால் கடந்த 2017ம் ஆண்டு  ஜூலை 1ம் தேதி நியமிக்கப்பட்டார். அவரது 3 ஆண்டு பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தோடு முடிவடைந்த நிலையில், அது இந்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது.  தற்போது அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதி தரப்பிலும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கே.கே.வேணுகோபால் ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக வரும் 2022 ஜூன் 30ம் தேதி வரை பதவியில் நீடிப்பார்….

The post ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் பதவிக்காலம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Union Govt. ,New Delhi ,Mukul Rothaki ,Union government ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை