×

சங்கை அறுத்துடுவேன் என போலீசை மிரட்டிய சேலம் இந்து முன்னணி நிர்வாகி நண்பருடன் அதிரடி கைது

சேலம்: சேலத்தில் போலீசாரை மிரட்டிய இந்து முன்னணி பிரமுகர், அவரின் நண்பரை போலீசார் கைது செய்தனர். சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் மாஸ்க் அணியாமல் வந்த ஒருவருக்கு போலீசார் கடந்த 25ம் தேதி ₹200 அபராதம் விதித்தனர். இதையடுத்து அங்கு வந்த  இந்து முன்னணி அமைப்பின் சூரமங்கலம் பகுதி ஒன்றிய செயலாளராக இருக்கும் செல்லபாண்டியன், அவரின் நண்பரான தமிழரசன் ஆகியோர் வந்து போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டனர். அதில், ‘டூட்டி போட்டா சும்மா வந்து உட்கார்ந்துட்டு போயிடனும். தேவையில்லாமல் வழக்கு போடக்கூடாது. செக்போஸ்ட்டை நொறுக்கிடுவேன். எல்லோர் சங்கையும் அறுத்துடுவேன். இந்து முன்னணினா மரியாதை கொடுக்கணும். இல்லையினா தீ வைத்து கொளுத்திபுடுவேன்,’ என அசிங்கமாக பேசி மிரட்டினார். ஒரு போலீஸ்காரர், அவரை சமாதானப்படுத்தினார். இருப்பினும் செல்லபாண்டியன், போலீசாரை அடிக்க பாய்ந்தார். இந்த சம்பவத்தின் வீடியோ, வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான செல்லபாண்டியன்(48), தமிழரசன்(23) ஆகியோரை தேடி வந்தனர். தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகள் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான இருவரையும் சிறையில் அடைக்க கொரோனா பரிசோதனைக்கு போலீசார் உட்படுத்தியுள்ளனர். அதன் முடிவு வந்ததும், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post சங்கை அறுத்துடுவேன் என போலீசை மிரட்டிய சேலம் இந்து முன்னணி நிர்வாகி நண்பருடன் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Salem Hindu Front ,Salem ,Salem Kondalampatti ,Roundabout ,
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...