×

மகாவீரர் பிறந்த நாளைக் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சமணப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகள்: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: மகாவீரர் பிறந்த நாளைக் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சமணப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகள் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பகவான் மகாவீரர் பிறந்த நாளைக் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சமணப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடக்கத்தில் பாவச் செயல்கள் இன்பம் தந்தாலும், முடிவில் துன்பமே தரும் என்று போதித்தவர் பகவான் மகாவீரர். அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்டி வாழ வேண்டுமென்ற அறநெறியை போதித்ததோடு மட்டுமல்லாமல், பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமையும், கொல்லாமையுமே நல்வினை என்பதைச் சுட்டிக்காட்டி அமைதியையும், அகிம்சை வழியையும் மக்களுக்கு உணர்த்தியவர் பகவான் மகாவீரர்.

உலகம் அமைதிப் பூங்காவாக திகழ வழிகாட்டிய பகவான் மகாவீரரின் பிறந்த நாளில் நாடெங்கும் தர்மம் தழைக்க வேண்டும், தீமைகள் முறியடிக்கப்பட வேண்டும் என்ற என்னுடைய அவாவினைத் தெரிவித்து, எனது மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை அனைவருக்கும் மீண்டும் கொள்கிறேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


Tags : Mahaveer ,Jayanti ,Jains ,O. Panneerselvam , Happy Mahaveer Jayanti to all Jains celebrating Mahaveer's birthday with joy: O. Panneerselvam
× RELATED தடையை மீறி இறைச்சி விற்பனை