புதுடெல்லி,: குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கரின் மனைவி சுதேஷ் தன்கர், தண்ணீர் பற்றாக்குறை அதிகமுள்ள ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்டவர். இவர் கடந்த 2013ம் ஆண்டு பனஸ்தலி வித்யா பீடத்தில் முனைவர் ஆராய்ச்சி பட்டப் படிப்பில் சேர்ந்து, “ராஜஸ்தான், ஜுன்ஜுனு மாவட்டத்தின் நிலையான வளர்ச்சி நிலத்தடி நீர்வளம் மற்றும் நீர்ப்பாசன விவசாயத்தில் நிலைத்தன்மையின் மதிப்பீடு” என்ற தலைப்பில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு, 2022 மார்ச் 14ல் தனது படிப்பை நிறைவு செய்தார். இந்நிலையில், பனஸ்தலி வித்யா பீடத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ராஜஸ்தான் ஆளுநர் கல்ரா மிஸ்ரா சுதேஷ் தன்கருக்கு முனைவர் பட்டத்தை வழங்கி கவுரவித்தார்.