×

பெரம்பலூர் மாவட்டத்தில் காவிரி-கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.90 கோடியில் விரைவில் செயல்படுத்தப்படும்: அமைச்சர் கே.என். நேரு பதில்

சென்னை: பெரம்பலூர் மாவட்டத்தில் காவிரி-கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.90 கோடியில் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருகிறது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னர் காவிரி-கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என கூறினார். பெரம்பலூருக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தை உருவாக்கக் கோரிய திமுக உறுப்பினர் பிரபாகரனின் கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தார்.

Tags : Perambalur District ,Minister ,K.N. Nehru , Perambalur, Joint Water Project, Minister K.N. Nehru
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...