மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய புகாரில் பேராசிரியர் கைது செய்யப்பட்டார். வரலாற்றுத்துறை பேராசிரியர் சண்முகராஜாவை வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீஸ் கைது செய்தது. மதுரை நாகமலைபுதுக்கோட்டை காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.