திருப்பரங்குன்றம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி எம்எட் இரண்டாம் ஆண்டு படித்து வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரி (23). நேற்று முன்தினம் நள்ளிரவு விடுதி மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.