×

கலாஷேத்ரா பேராசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு பற்றி இதுவரை மாணவிகள் எழுத்துப்பூர்வ புகார் தரவில்லை: கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் பேட்டி

சென்னை: கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். கலாஷேத்ராவில் மாணவிகள் போரட்டம் நடத்தும் நிலையில் கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் இருந்து இதுவரை பாலியல் புகார் தொடர்பாக எழுத்துப்பூர்வ புகார் வரவில்லை. புகார் வந்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கல்லூரி பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாணவிகள் கூறியுள்ளனர்.

Tags : prem anand , Kalashetra Professor, Sex, Additional Commissioner of Police
× RELATED குத்தாலம் அருகே சமூக தணிக்கை கிராம சபை கூட்டம்