×

செம்மஞ்சேரியில் பயங்கரம் காலை பிடித்து சுவரில் அடித்து 2 மாத குழந்தை படுகொலை: கொடூர தந்தை கைது

துரைப்பாக்கம்:  சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கவுசல்யா. காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனால், திருமணத்திற்கு முன்பே 2 பேரும் ஜாலியாக இருந்ததால் கவுசல்யா கர்ப்பமானார். இதனால், கடந்த 5 மாதத்திற்கு முன்பு, இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.  இந்த தம்பதிக்கு, கடந்த 2 மாதத்திற்கு முன்பு, மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது, ரஞ்சித்குமார், மனைவி கவுசல்யா மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, மனைவி கவுசல்யாவிடம், ரஞ்சித்குமார் நலம் விசாரித்தபோது, கவுசல்யாவின் உடலின் மீது கைவைத்துள்ளார்.

இதனால், கவுசல்யா வலி அதிகமாக இருக்கிறது என கூறவே, கோபமடைந்த கணவர் ரஞ்சித்குமார், மருத்துவர் மட்டும் உன் உடலை தொடும்போது வலி ஏற்படவில்லையா எனக்கூறி தகராறு செய்துள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து கவுசல்யாவின் பெற்றோர், கவுசல்யாவையும், கை குழந்தையையும் செம்மஞ்சேரிக்கு அழைத்து வந்துள்ளனர்.  நேற்று காலை ரஞ்சித்குமார், செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் உள்ள மனைவி வீட்டிற்கு வந்து, கவுசல்யாவை புறப்பட சொல்லி கூறவே, 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார், கவுசல்யாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், தலை மற்றும் காலில் பலத்த காயமடைந்த கவுசல்யாவை, பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு  அழைத்து சென்றனர்.

அப்போது ரஞ்சித்குமார், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 2 மாத கைக்குழந்தையின் காலை பிடித்து சுவரில் அடித்ததில், குழந்தையின் விலா எலும்பு நொறுங்கியது. மேலும், பின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு, குழந்தை வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரஞ்சித்குமாரை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Semmancheri , Murder of 2-month-old baby in Semmancheri by holding his leg and beating him against the wall: brutal father arrested
× RELATED செம்மஞ்சேரியில் ரூ.78 கோடி மதிப்பில்...