சென்னை: அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர், பொன்னியின் செல்வன் படத்துக்கு தடை கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள், நாவலைப் படிக்காத நிலையில் வரலாற்றை திரித்துள்ளதாக எப்படி கூற முடியும். பொன்னியின் செல்வன் படம் அந்த நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.