×

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தி.மலை, நாமக்கல், காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 28 நகராட்சிகளில் ரூ.123.80 கோடி மதிப்பீட்டில் புதிய வார சந்தைகள் மற்றும் தினசரி சந்தைகள் அமைக்கப்படும். சென்னை கொடுங்கையூர் குப்பைக்கிடங்கில் குப்பைகளை அகற்றி, நிலத்தை மீட்டெடுக்க ரூ.600 கோடி செலவில் பணிகள் நடந்து வருகின்றன எனவும் கூறினார்.


Tags : Ramanathapuram ,Pudukottai ,Thimalai ,Namakkal ,Karaikudi ,Minister ,KN , Steps taken to upgrade municipalities like Ramanathapuram, Pudukottai, Thimalai, Namakkal, Karaikudi to Municipal Corporations: Minister KN Nehru Information
× RELATED ரூ.111 கோடி போதை பொருள் பதுக்கிய தொழிலதிபர் கைது