சென்னை: ‘பத்து தல படத்திற்கு நரிக்குறவர்களை ரோஹிணி திரையரங்கிற்குள் அனுமதிக்கப்படாத விவகாரத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது. என குறிப்பிட்டுள்ளார்.
