சென்னை: போக்குவரத்துத் துறையில் தனியார்மயம் கிடையாது என்று அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்துள்ளார். அதிமுக உறுப்பினர் அருண்குமார் எழுப்பிய கேள்விக்கு போக்குவரத்து அமைச்சர் சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளார். அரசின் வழித்தடத்தில் தனியார் பேருந்து இயக்கப்படுமே தவிர, தனியாருக்கு வழித்தடம் தரப்படவில்லை என அவர் தெரிவித்தார்.