புதுச்சேரி: புதுச்சேரியில் 100 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பு நடத்தப்படும் என கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். 45 நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு மற்றும் 192 பயிற்சியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர். 152 பயிற்சி பெற்ற பட்டதாரிகள், 145 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவர் என அவர் தெரிவித்தார்.