புதுச்சேரி: மீண்டும் கல்வி கடன் கொடுக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று புதுச்சேரி பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பிறப்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகத்தின் மூலம் கல்விக்காக மாணவர்கள் கடன் பெற்றுள்ளனர். கல்விக்காக கடன் பெற்ற மாணவர்களிடம் அதிகாரிகள் கடனை திரும்ப செலுத்த தொந்தரவு செய்யக்கூடாது என அவர் தெரிவித்தார்.