×

மேல்கதிர்பூர், பெரும்பாக்கம், தாமல், முசரவாக்கம் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியத்தில் அமோக நெல் விளைச்சல் காரணமாக முன்கூட்டியே நெல் அறுவடை செய்யப்பட்ட நிலையில், விவசாயிகளின் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், காஞ்சிபுரம் ஒன்றியத்தில் மேல்கதிர்பூர், பெரும்பாக்கம், தாமல், முசரவாக்கம், கீழ்அம்பி, சிறுணை பெருகல், கூரம் பகுதிகளில் அமைக்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் ஒன்றியக்குழுதலைவர் மலர்கொடி குமார் தலைமை தாங்கினார்.

நெல் கொள்முதல் நிலையங்களை காஞ்சிபுரம் எம்பி செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன்  ஆகியோர் திறந்து வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் நித்யா சுகுமார், திமுக காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் குமார், ஒன்றிய குழு உறுப்பினர் ராம் பிரசாத் மற்றும் ஊராட்சி தலைவர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Tags : Melakadirpur ,Perumbakkam ,Thamal ,Musaravackam , Melakadirpur, area, direct paddy procurement, stations
× RELATED தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக...