×

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தேனி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், திருவண்ணாமலை, நீலகிரியில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

Tags : Tamil Nadu ,Meteorological Department , Tamil Nadu, Thunder, Lightning, Rain, Meteorological Center
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்