×

அரசு கல்லூரிக்குள் புகுந்து பேராசிரியரை மிரட்டிய பாஜ நிர்வாகி கைது

வேதாரண்யம்: வேதாரண்யம் அரசு  கல்லூரிக்குள் புகுந்து பேராசிரியரை மிரட்டியதாக பாஜ  கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவரை  போலீசார் கைது செய்தனர்.நாகப்பட்டினம்  மாவட்டம், வேதாரண்யத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவர், மாணவியிடம் குப்பைகளை எடுக்கச்சொல்லி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து  மாணவி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்ததன்பேரில் கல்லூரி  நிர்வாகத்தினர் மாணவரின் பெற்றோரை அழைத்து வருமாறு கூறியது.

நேற்று  மாணவரின் பெற்றோர் மற்றும் பாஜ கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் மணிகண்டன்  ஆகியோர் கல்லூரிக்கு வந்தனர். அங்கு கல்லூரி பேராசிரியரிடம் தகராறு  செய்துள்ளனர். இது குறித்து கல்லூரி வணிகவியல்துறை தலைவர் மாரிமுத்து,  வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிந்து கல்லூரியில் புகுந்து பேராசிரியரை மிரட்டிய பாஜ  கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் மணிகண்டனை கைது செய்தனர்.

Tags : BJP , A BJP official who entered the government college and threatened the professor was arrested
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...