×

தூக்கத்தில் அரிவாளால் வெட்டியதோடு தலையில் கல்லை போட்டு அமமுக பிரமுகர் கொலை: மனைவி கைது

திருப்பரங்குன்றம்: மதுரை, திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தனக்கன்குளம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சர்க்கரை (51). அமமுக பிரமுகரான இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி அன்னலட்சுமி (48). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சர்க்கரைக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று முன்தினம் நள்ளிரவில் தம்பதி இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டது.

அப்போது மனைவியை சரமாரியாக தாக்கிய சர்க்கரை, பின்னர் தூங்கச் சென்றுவிட்டார். ஆத்திரத்தில் இருந்த அன்னலட்சுமி, அவர் தூங்கும்போது அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டினார். உயிருக்கு போராடியவர் மீது வெளியே சென்று கருங்கல்லை எடுத்து வந்து தலையில் போட்டு கொன்றார். இது குறித்து திருநகர் போலீசார் வழக்கு பதிந்து அன்னலட்சுமியை கைது செய்தனர்.

Tags : Ama Mukha , Ama Mukha celebrity killed by cutting her with a sickle and throwing a stone on her head in her sleep: Wife arrested
× RELATED சடலத்தை சுடுகாட்டில் புதைக்கவிடாமல் தடுத்த அமமுக ஊராட்சி தலைவர்