×

2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: பொது, வேளாண்மை பட்ஜெட் 3ம் நாள் விவாதம் நடக்கிறது

சென்னை: 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை மீண்டும் கூடுகிறது. பொது, வேளாண்மை பட்ஜெட் 3ம் நாள் விவாதம் நடக்கிறது. வருகிற 29ம் தேதி நீர்வளத்துறை மானியக்கோரிக்கை நடக்கிறது. தமிழக அரசின் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் கடந்த 20ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி வேளாண்மை துறை பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். 22ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டது.

இதைத் தொடர்ந்து 23ம் தேதி, 24ம் தேதிகளில் பொதுபட்ஜெட், வேளாண்மை பட்ஜெட் ஆகியே 2 பட்ஜெட்கள் மீது விவாதம் நடந்தது. எதிர்க்கட்சி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை, நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 2 நாட்கள் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டது. 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டப்பேரவை கூடுகிறது. காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படும். எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து ேபசுவார்கள். தொடர்ந்து 2 பட்ெஜட்கள் மீதான விவாதம் நடைபெறும்.

நாளை பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலுரை வழங்க உள்ளனர். மேலும் 2023-2024ம் ஆண்டு செலவினத்திற்கான முன்பண மானியக்கோரிக்கையும், கூடுதல் செலவிற்கான மானியக்கோரிக்கை பேரவையில் வைக்கப்படும். தொடர்ந்து 29ம் தேதி(புதன்கிழமை) முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை துறை வாரியாக மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. முதலாவதாக வருகிற 29ம் தேதி காலையில் நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மானியக்கோரிக்கையும், பிற்பகலில் போக்குவரத்து மானியக்கோரிக்கையும் நடக்கிறது.

30ம் தேதி உள்ளாட்சி துறையும், ஊரக வளர்ச்சி துறையும், 31ம் தேதி உயர்கல்வி, பள்ளிக்கல்வி துறையும், 1ம் தேதி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக் கோரிக்கையும் நடைபெற உள்ளது. ஒவ்வொரு மானியக்கோரிக்கை அன்றும் மானியக்கோரிக்கைகளை தாக்கல் செய்து, புதிய அறிவிப்புகளை துறை சார்ந்த அமைச்சர்கள் வெளியிடுவார்கள். அதே நேரத்தில் இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எம்பி பதவி நீக்கம் தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ேபச திட்டமிட்டுள்ளனர்.


Tags : Legislature resumes today after 2-day break: General, agriculture budget debates on 3rd day
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...