×

அடுத்தவர் உயிரை காப்பாற்ற தங்கள் உடல் உறுப்பை தானம் செய்ய முன்வருவோர் இறைவனுக்கு ஒப்பானவர்கள்: பிரதமர் மோடி

டெல்லி: அடுத்தவர் உயிரை காப்பாற்ற தங்கள் உடல் உறுப்பை தானம் செய்ய முன்வருவோர் இறைவனுக்கு ஒப்பானவர்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார். ராமநவமி, ரமலான் உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்படவுள்ள நிலையில் மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags : God ,PM Modi , Those who donate their organs to save another person's life are like God: Modi
× RELATED எதற்காக இறைத்தூதர்கள்?