
சென்னை: ஏப்.15-க்குள் டான்செட் மற்றும் சிஇஇடிஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு இயக்குனர் ஸ்ரீதர் தகவல் தெரிவித்துள்ளனர். டான்செட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான கலந்தாய்வு கோவையில் நடைபெறவுள்ளது. டான்செட் தேர்வு எழுதிய மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்க வேண்டும். சிஇஇடிஏ தேர்வு எழுதிய மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ பயில டான்செட் தேர்வு தொடங்கியது.