×

அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உட்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உட்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.  

தமிழ்நாட்டில் கோடைகாலம் துவங்குவதற்கு முன்பு வெயில் பல மாவட்டங்களில் சுட்டெரிக்க தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் அவ்வப்போது சில மாவட்டங்களில் வெளியிலும், மழையும் காலநிலை மாறி மாறி வருகிறது. காலையில் பல மாவட்டங்களில் வெளியிலின் தாக்கம் அதிகமாவும் மாலையில் பணி மற்றும் இரவில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தென்  இந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் வளிமண்டல கிழடுக்கு திசை காற்றும் மேலடுக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags : Tharumapuri ,Krishnagiri , Chance of rain in 14 districts including Dharmapuri, Krishnagiri in next 3 hours: Meteorological Department Information
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்