கொல்கத்தா: கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான குமாரசாமி நேற்று மாலை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கொல்கத்தாவின் காளிகாட்டில் உள்ள மம்தா பானர்ஜி இல்லத்துக்கு சென்ற குமாரசாமி, மம்தா பானர்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், 2024 மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த பிராந்திய கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி அமைப்பது குறித்தும் இருதலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.