சென்னை: ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது கடும் கண்டனத்துக்குரியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். ஒன்றிய பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்கு வேறு எந்தக் காரணமும் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார். வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கருத்துக் கூறினால், அவர்களின் பதவியை குறி வைத்து பாஜக அரசு நடவடிக்கை எடுப்பதாக முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.