×

பென்னாத்தூர் அருகே குடும்ப தகராறில் தற்கொலை செய்து இறந்த தாய், குழந்தை உடல் அடக்கம்

* இறப்பில் சந்தேகம் என ெபற்றோர் புகார் * கணவன் உள்பட 4 பேரிடம் விசாரணை

அணைக்கட்டு :  வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா பென்னாத்தூர் அடுத்த கேசவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன்(30). இவரது மனைவி சந்தியா(26). தம்பதிகளுக்கு திருமணமாகி 2 வயதில் கீர்த்திகா என்ற மகள் இருந்தார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட தகராறில் மணிவண்ணன் வீட்டில் இல்லாதபோது வீட்டின் உற்பக்க கதவை பூட்டி கொண்டு குழந்தையை துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தாய் சந்தியாவும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து இவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டது. வேலூர் தாலுகா போலீசார் இது குறித்து விசாரனை நடத்தி வந்தனர். இந்நிலையில் சந்தியாவின் பெற்றோர் சந்தியா, குழந்தை கீர்த்திகாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தியாவின் கணவர் மணிவண்ணன், மாமனார், மாமியார் மற்றும் நாத்தனாரிடம் விசாரனை நடத்தினர். தொடர்ந்து திருமணம் ஆகி 3 ஆண்டிலே சந்தியா இறந்ததால் வேலூர் ஆர்டிஓ கவிதா விசாரனை நடத்தினார். மேலும் டிஎஸ்பி திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, எஸ்.ஐ. ராஜா உள்ளிட்டோர் இருகுடும்பத்தினரிடமும் விசாரனை நடத்தினர்.

தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்த இருவரின் உடலையும் எங்களிடம் தான் ஒப்படைக்க வேண்டும் சந்தியாவின் தாய் வீட்டார் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு கணவர் குடும்பத்தினரும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து பிரேத பரிசோதனை முடிந்து சந்தியா மற்றும் குழந்தை கீர்த்திகாவின் உடல் சந்தியாவின் தாய் ஊரான அணைக்கட்டு அருகே உள்ள குடிசை கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் இருவரது உடல்களும் அடக்கம் செய்யபட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சந்தியா இறப்பில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யபட்டு கணவர் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சந்தியா மற்றும் குழந்தையின் உடலை கணவர் குடும்பத்தினரின் ஒப்புதலோடு சந்தியாவின் தாய் வீடு அமைந்துள்ள குடிசை கிராமத்திற்கு பிரேத பரிசோதனை முடிந்து எடுத்து செல்லப்பட்டது.

சந்தியா, குழந்தை இறப்பு தொடர்பாக தற்கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் அறிக்கை அடிப்படையிலே அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றனர். கணவன் உயிருடன் இருக்கும் சமயத்தில் மனைவி, குழந்தைகள் இறந்தால் கணவர் ஊரில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், மனைவியின் தாய் கிராமத்திற்கு உடல்கள் எடுத்துசெல்லப்பட்டு அடக்கம் செய்யபட்டுள்ள நிகழ்வால் கணவர் குடும்பம் அமைந்துள்ள கிராமத்தில் மக்கள் இறுதியாக அவர்களுடைய முகங்கள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு கிராம மக்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : Bennathur , Dam: Manivannan (30) belongs to Kesavapuram village next to Bennathur, Vellore taluka, Vellore district. His wife Sandhya (26).
× RELATED சென்னை கடற்கரை-வேலூர் கன்டோன்மென்ட் புறநகர் ரயில் தி.மலை வரை நீட்டிப்பு..!!