சென்னை: தேவைக்கு அதிகமான நிலத்தை அரசு ஒரு போதும் கையகப்படுத்தாது என என்.எல்.சி விவகாரம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். விவசாயிகளிடம் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. உயர்த்தப்பட்ட இழப்பீடு தொகையை வழங்குவது, மறுவாழ்வுக்கான பலன்களை அளிப்பது குறித்தும் கோரிக்கை வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.