×

மின் வேலியில் சிக்கி யானைகள் பலியாகும் விவகாரத்தில் அதிகாரிகள் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மின் வேலியில் சிக்கி யானைகள் பலியாகும் விவகாரத்தில் முதன்மை தலைமை வன பாதுகாவலர், தமிழ்நாடு மின்னுற்பத்தி பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மின் வேலியில் சிக்கி யானைகள் பலியாவது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பான சிறப்பு வழக்குகளை விசாரிக்கின்ற நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அப்போது நீதிபதிகள் சதீஸ்குமார் மற்றும் பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் யானைகள் ஆர்வலர் முரளிதரன், சொக்கலிங்கம் ஆகியோர் முறையீடு செய்தனர். மின்வேலிகள் அமைக்க விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்று பலமுறை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியும் இதுவரை அமல்படுத்தவில்லை என தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 யானைகள் மின்வேலியில் சிக்கி இறந்துள்ளது. அதுமட்டுமின்றி யானைகள் மரணம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

மின்வேலியில் சிக்கி வன விலங்குகள் பலியாவதை தடுப்பதற்கு இதுவரை என் உரிய விதிமுறைகளை அமல்படுத்தவில்லை என கேள்வியெழுப்பினார். இது தொடர்பாக முதன்மை தலைமை வன பாதுகாவலர், தமிழ்நாடு மின்னுற்பத்தி பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்.19-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Tags : Electric fence, elephant killing issue, officials, high court order
× RELATED தமிழ்நாட்டில் 39 தொகுதியில் வேட்பு...