×

அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை: காவல்துறை ஐகோர்ட்டில் தகவல்

சென்னை: காவல்துறை பாதுகாப்பை மறு ஆய்வு செய்த போது அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறை பதிலளித்துள்ளது. சி.வி.சண்முகத்தின் மனு மீது எடுத்த நடவடிக்கை குறித்து காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2006-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது தன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதால் அப்போது முதல் வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென விளக்கி கொள்ளப்பட்டதாக கூறி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் சாட்சிகள் விசாரணைக்கான முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாதுகாப்பை விளக்கிக் கொண்டதற்கு காரணம் ஏதும் தெரிவிக்கவில்லை என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் பாதுகாப்பு கோரி தான் அளித்த மனுவை பரிசீலிக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது சண்முகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிங்கர் சமூக வலைத்தளங்கள் மற்றும் போன் மூலமாக கொலை மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்கள் வருவதாகவும், இது தொடர்பாக அளித்த புகாரில் காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் எடுக்காமல் இருப்பதாக கூறினார்.

ஆனால் காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.வி.சண்முகத்திற்கான பாதுகாப்பை மறு ஆய்வு செய்தபோது, அவருக்கு எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை என தெரியவந்ததன் அடிப்படையில், அவருடைய பாதுகாப்பானது விளக்கிக்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

இதனை அடுத்து பாதுகாப்பு கோரி சி.வி.சண்முகம் அளித்த மனுமீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை மார்ச் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.


Tags : AIADMK ,CV Shanmukha ,ICourt , AIADMK MP, CV Shanmugam, police, information in court
× RELATED சி.வி.சண்முகத்திற்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை