சென்னை: பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார். மசோதாவுக்கு ஆளுநர் தாமதிக்காமல் ஒப்புதல் தர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.